தென்னிந்திய சினிமா

புராண, இதி​காச பின்னணியில் 7 படங்கள்

செய்திப்பிரிவு

விஷ்ணு​வின் தீவிர பக்​த​னான பிரகலாதனின் கதை​யுடன் உரு​வான அனிமேஷன் திரைப்​படம் ‘மகாவ​தார் நரசிம்​மா’. ஹோம்​பாளே பிலிம்​ஸ், கிளீம் புரொடக் ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த இப்​படத்தை அஸ்வின் குமார் இயக்​கி​னார்.

5 மொழிகளில் வெளி​யான இப்​படம், தெலுங்​கு, இந்​தி​யில் வரவேற்​பைப் பெற்​றது. ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து இப்​படம் சாதனைப் படைத்​ததை அடுத்து புராண, இதி​காசக் கதைகளைப் படமாக்​கு​வதற்​குப் பல நிறு​வனங்​கள் ஆர்​வம் கொண்டுள்ளன. அதன்​படி படங்களும் உருவாக்கப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில், ஜியோ ஹாட்​ஸ்​டாரில் செயற்கை தொழில்​நுட்​பத்​தால் உரு​வாக்​கப் பட்​டுள்ள ‘மகா​பாரதம்’ தொடர் ஒளிபரப்​பாகி வரு​கிறது. இதை கலெக்​டிவ் ஆர்ட்​டிஸ்ட்ஸ் நெட்​வொர்க் சார்​பாக அதன் நிறு​வனர் மற்​றும் தலைமை நிர்​வாக அதி​காரி விஜய் சுப்​பிரமணி​யம் தயாரித்​துள்​ளார்.

          

இவர் புராண, இதி​காச மற்​றும் வரலாற்​றுப் பின்​னணி​யில் உரு​வாகும் 7 புதிய திரைப்​படங்​கள் மற்​றும் வெப் தொடர்களை அறி​வித்​துள்​ளார். மா காளி, ஹனு​மான், சிவதுர்​கா, கிருஷ்ணா, சுவாமி சமர்த் வாழ்க்கை கதை மற்றும் மராட்​டிய மன்​னர் சிவாஜி பற்​றிய திரைப்​படங்​கள் உரு​வாக இருப்​ப​தாக அறி​வித்​துள்​ளார்.

அவர் மேலும் கூறும்​போது, “நமது நாட்​டுப்​புறக் கதைகள், சர்​வ​தேச அளவில் மிக​வும் சிறந்​தவை என்று எப்​போதும் நம்​பு​கிறேன். கலாச்​சா​ரத்​தோடு பின்​னிப் பிணைந்த இக் கதைகள் உலகளவில் கொண்டு செல்​வதற்​குத் தகுதியானவை. எங்​கள் நிறுவனம் வளரும்​போது, இன்​னும் பல புராண, வரலாற்றுக் கதைகளை உரு​வாக்​கு​வோம்​” என்றார்​.

SCROLL FOR NEXT