தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா படப்பிடிப்புத் தளத்தில் தனது உதவியாளரை அறைந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாலகிருஷ்ணாவின் 102-வது படம் வியாழக்கிழமை அன்று தொடங்கியது. இந்தப் படத்தை தமிழ் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
நயன்தாரா ‘சிம்ஹா’, ‘ராம ராஜ்ஜியம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாலகிருஷ்ணனுடன் இணைந்து நடிக்கிறார்.
பெயரிடப்படாத இந்த தெலுங்கு படத்துக்கான பூஜையில் நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்டார். அப்போது தனது ஷூலேசை அவிழ்த்து விடக் கூறி, பாலகிருஷ்ணா தனது உதவியாளரை அறைந்த காட்சிகள் வியாழக்கிழமை மாலை இணையத்தில் உலவத் தொடங்கின.
சமூக ஊடகங்களிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதுபோன்ற சம்பவத்தில் பாலகிருஷ்ணா சிக்குவது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்றவரை பாலகிருஷ்ணா அறைந்தது குறிப்பிடத்தக்கது.