தென்னிந்திய சினிமா

முதல் தெலுங்குப் படத்துக்கான வரவேற்பில் நெகிழ்ந்த சாய் பல்லவி

ஐஏஎன்எஸ்

நடிகை சாய்பல்லவியின் முதல் தெலுங்குப் படமான 'ஃபிடா'வுக்கு கிடைத்த வரவேற்பில் அவர் நெகிழ்ந்துள்ளார்.

தெலுங்கானா பின்னணியில் சொல்லப்பட்டுள்ள காதல் கதையான 'ஃபிடா' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பானுமதி என்கிற தெலங்கானா பெண்ணாக சாய்பல்லவி நடித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் , "ரசிகர்களின் வரவேற்பு ஆச்சரியமாக உள்ளது. அதுவும் தெலங்கானா நடையில் என் வசனங்கள் அவர்களை ஈர்த்துள்ளன. அந்த மொழியைக் கற்றதால், தற்போது தெலுங்கு என்று நினைத்தாலே அந்த நடைதான் எனக்கு வருகிறது " என்று கூறியுள்ளார்.

தில் ராஜு தயாரிக்க, வருண் தேஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சேகர் காமுல்லா இயக்கியுள்ளார். முதல் மூன்று நாட்களில் மட்டும் படம் 25 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT