தென்னிந்திய சினிமா

கார் விபத்தில் 2 பேர் காயம் - நடிகர் மணி​யன்​பிள்ளை ராஜு கைது

செய்திப்பிரிவு

பிரபல மலை​யாள நடிக​ரான மணி​யன்​பிள்ளை ராஜு, சுமார் 400-க்​கும் மேற்​பட்ட படங்​களில் நடித்​துள்​ளார். இவர், திரு​வனந்​த​புரத்​தில் உள்ள கிளப் ஒன்​றி​லிருந்து வியாழக்கிழமை இரவு 9.30 மணி​யள​வில் தனது காரில் சாலையை கடக்க முயன்​றார். அப்​போது அவருடைய கார் மீது வேக​மாக வந்த இருசக்கர வாக​னம் ஒன்று பயங்கரமாக மோதி​யது.

இதில் இரு சக்கர வாக​னத்​தில் வந்​தவர்​கள் தூக்கி வீசப்பட்டுப் படு​காயமடைந்​தனர். காரின் முன் பக்​கம் சேதமடைந்​தது. ஆனால், மணி​யன்​பிள்ளை ராஜு காரை நிறுத்​தாமல் சென்​று​விட்​டார். காயமடைந்​தவர்​களை அக்கம் பக்​கத்​தினர் மீட்டு அரு​கில் உள்ள மருத்துவமனையில் சேர்த்​தனர். அவர்​கள் அதே பகு​தியை சேர்ந்த சூரஜ், நிதேவ் என்பது தெரிய​வந்​தது. விபத்து குறித்து கேரள போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

          

இதையடுத்து வெள்​ளிக்​கிழமை காலை மியூசி​யம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மணி​யன்​பிள்ளை ராஜுவை கைது செய்து போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். பின்​னர் போலீஸ் ஸ்டேஷனில் வழங்கிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், “பயத்​தில் காரை நிறுத்தாமல் சென்​று​விட்​டேன். காயமடைந்தவர்களுக்கான மருத்​து​வச் செலவை ஏற்​றுக்​கொள்​வ​தாகக் கூறியிருக்கிறேன்” என்​றார். இந்​நிலை​யில், சிசிடிவி காட்சியில் கார் மெது​வாகச் சாலை​யைக் கடக்க முயற்சிப்பதும், இரு சக்கர வாக​னம் வேக​மாக வந்து மோது​வதும் பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT