தென்னிந்திய சினிமா

சிரஞ்சீவி நடிக்கும் படத்தை தயாரிக்கும் நானி - அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தை நானி தயாரிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘போலா ஷங்கர்’ படத்தின் தோல்விக்குப் பிறகு தனது அடுத்த படங்களின் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சீரஞ்சிவி. தற்போது ‘விஸ்வாம்பரா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதனை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். ஸ்ரீகாந்த் ஒடேலா தீவிர சீரஞ்சிவி ரசிகர். இதனை பல மேடைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நானி நடிப்பில் வெளியான ‘தசரா’ படத்தின் மூலம் இயக்குநரானவர் இவர். அடுத்து நானியை வைத்து ‘பாரடைஸ்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு சிரஞ்சீவியை வைத்து படம் இயக்குகிறார் ஸ்ரீகாந்த் ஒடேலா. இந்தப் படத்தை நானி தயாரிக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் கையிலிருந்து ரத்தம் சொட்டும் படி சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT