தென்னிந்திய சினிமா

தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி

ஸ்கிரீனன்

'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராஜமெளலி.

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஓய்விலிருந்து வருகிறார் இயக்குநர் ராஜமெளலி. அவருடைய அடுத்த படங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

தற்போது முதன்முறையாக தனது அடுத்த 2 படங்கள் குறித்து பேசியுள்ளார் ராஜமெளலி. அதில், "சமூக அக்கறையுடன் கூறிய படமொன்றை முதலில் இயக்கவுள்ளேன். இதனை தயாரிப்பாளர் டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து 2019-ல் மகேஷ்பாபு நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளேன். இதனை கே.எல்.நாராயணா தயாரிக்கவுள்ளார்" என்று தெரிவித்துள்ளார் ராஜமெளலி.

மேலும், தனது அடுத்த படம் எந்த மொழியில் இருக்கும், யார் நடிக்கவுள்ளார்கள் உள்ளிட்ட எதுவுமே இன்னும் முடிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் ராஜமெளலி.

SCROLL FOR NEXT