பாலிவுட்

தென்னிந்திய படப்பிடிப்பில் மோசமான அனுபவம்: ராதிகா ஆப்தே வருத்தம்

செய்திப்பிரிவு

இந்தி நடிகை​யான ராதிகா ஆப்​தே, தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு​ராஜா, வெற்​றிச்​செல்​வன், கபாலி ஆகிய படங்​களில் நடித்​துள்​ளார். இவர் இப்​போது நடித்​துள்ள ‘சாலி மொஹப்​பத்’ என்ற இந்தி படம் தற்​போது ஜீ-5 தளத்​தில் வெளி​யாகி​யுள்​ளது. இந்​நிலை​யில் தென்​னிந்​திய சினி​மா​வில் தான் உரு​வக்​கேலிக்கு ஆளான​தாக​வும் ஆபாச​மான கருத்​துகளை எதிர்​கொண்​ட​தாக​வும் வருத்​தத்​தோடு தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “நடிக்​கத் தொடங்​கிய காலத்​தில் இந்​தி​யில் அதிக வாய்ப்​பு​கள் கிடைக்​காத​தால், தென்​னிந்​திய படங்​களில் நடிக்​கத் தொடங்​கினேன்.

அப்​போது எனக்கு பணம் தேவைப்​பட்​ட​தால், அதற்​காக நடித்​தேன். நான் நடித்த ஒரு படத்​தின் படப்​பிடிப்​பு, சிறு நகரம் ஒன்​றில் நடந்​தது. படப்​பிடிப்​புத் தளத்​தில் அனை​வரும் ஆண்​களாக இருந்​தனர். நான் மட்​டுமே பெண்.

அந்த நேரத்​தில் அவர்​கள் நடந்து கொண்ட விதம் மற்​றும் ஆபாசமான பேச்​சுகளால் எனக்கு அழுகை வந்​தது. அது உண்​மை​யில் அதிர்ச்​சிகர​மான சம்​பவம். எந்​தப் பெண்​ணும் அப்​படியொரு சூழலில் இருப்​பதை விரும்ப மாட்​டார்.

இந்​தி​யிலும் சில செல்​வாக்கு மிக்க நபர்​களின் நடத்​தைப் பிடிக்​காத​தால் பெரிய படங்​களில் இருந்து வெளி​யேறி இருக்​கிறேன்​” என்​றார்​.

SCROLL FOR NEXT