பாலிவுட்

“கடைசி மூச்​சுவரை நடிக்கணும்” - மிருணாள் தாக்குர் ஆசை

நிலா

சிறந்த நடிகை​களில் ஒரு​வ​ராக அங்​கீகரிக்​கப்பட வேண்​டும் என்பதே தனது கனவு என்று நடிகை மிருணாள் தாக்​குர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: சில நேரங்​களில் தன்​னம்​பிக்கை குறை​வாக உணர்​கிறேன். அது என்னைப் பதற்​றமடைய செய்​கிறது. ஆனால் இன்​றும் கூட, அதை அப்​படியே ஏற்​றுக்​கொள்​வதற்கு எனக்​குத் தைரி​யம் தேவைப் படுகிறது. அது ஏனென்று தெரிய​வில்​லை. தெரிந்​து​கொள்​ள​வும் விரும்​ப​வில்​லை. ‘நீ உன் திறமையை அல்​லது உன்னை குறைத்து மதிப்​பிடு​கிறாய்’ என்று பலர் சொல்​கிறார்​கள். அதைச் சரி செய்ய நான் முயற்சி செய்து வரு​கிறேன். இது இப்​படி இருந்​தா​லும் மகிழ்ச்​சி​யாகவே இருக்​கிறேன்.

          

இந்​தத் தருணத்தை ரசிக்​க​வும், புதிய விஷ​யங்​களைத் தெரிந்​து​கொள்​ள​வும் விரும்​பு​கிறேன். இன்​றைய தலை​முறை​யின் சிறந்த நடிகை​களில் ஒரு​வ​ராக அங்​கீகரிக்​கப்பட வேண்​டும் என்​பது என் கனவு. அதேநேரம், அதை வணிக ரீதி​யான வெற்​றி​யின் மூல​மும் நிரூபிக்க வேண்​டி​யிருக்​கிறது. நான் இன்​னும் நிரூபிக்க வேண்டிய விஷ​யங்​கள் அதி​கம் இருக்​கின்​றன. ஒவ்​வொரு நாளையும் அதன் போக்​கிலேயே நான் எதிர்​கொள்​கிறேன்.

என்​னுள் இருக்​கும் சிறந்​ததை வெளிக் கொண்டு வரும் இயக்குநர்களு​டன் பணி​யாற்ற விரும்​பு​கிறேன். என்னை கதாநாயகி​யாக மட்​டும் காட்​டா​மல், என் கதா​பாத்​திரம்​ தான் முக்கி​யம் என்​பதை உணர்த்​தும் படங்​களி​லும் அப்​படி​யான இயக்குநர்​களு​டன் பணி​யாற்ற ஆசை. சினி​மா​வில் முதல் இடத்தை அடைய வேண்​டும் என்ற எண்​ணம் எனக்கு இல்​லை. ஆனால், என் கடைசி மூச்​சுவரை நடித்​துக் கொண்டே இருக்க வேண்​டும் என்​பது ​தான் எனது விருப்​பம். இவ்​வாறு மிருணாள் தாக்​குர் கூறி​னார்.

SCROLL FOR NEXT