நடிகை அக்‌ஷரா ஹாசன்

 
பாலிவுட்

அறி​வியல் புனைகதை​யில் அக்‌ஷரா ஹாசன்

நிலா

நடிகை அக் ஷரா ஹாசன் இப்​போது நடித்​துள்ள ​படம், ‘சிமுலாக்ரா’. எதிர்​கால உலகை மைய​மாகக் கொண்ட அறி​வியல் புனைகதை படமான இதில் சத்​யஜித் துபே முக்​கிய கதாபாத்திரத்தில் நடித்​துள்​ளார். பங்​கஜ் சாவந் இயக்​கி​யுள்ள இப்படம், வேவ்ஸ் ஓடிடி தளத்​தில் நாளை (ஜூலை 17) வெளியாகிறது.

இப்​படம் குறித்து அக் ஷரா ஹாசன் கூறும்​போது, ‘‘இதில் நிவி என்ற கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளேன். இது​வரை நடித்​த​தில் இருந்து முற்​றி​லும் மாறு​பட்ட கேரக்​டரில் நடித்​துள்​ளேன். இந்த கதா​பாத்​திரத்​துக்​காக வேறு​வித​மான முதிர்ச்சி தேவைப்​பட்​டது. கதை​யின் பல அடுக்​கு​கள் காரண​மாக, ஒரு நடிகை​யாக என்​னுள் இருந்த புதிய பரி​மாணத்​தைக் கண்​டறிய முடிந்​தது.

பலவித​மான உணர்​வு​களின் மோதல் களை வெளிப்​படுத்​தும் வாய்ப்​பும் கிடைத்​தது. இந்​தக் கதா​பாத்​திரம் ஒரு நடிகை​யாக எனக்கு பெரும் சவாலைக் கொடுத்​தது. ‘நி​வி’​யாக நடித்த அனுபவத்தை நான் உண்​மை​யிலேயே ரசித்​தேன்” என்​றார்.

சத்​யஜித் துபே கூறும்​போது, “செயற்கை நுண்​ணறிவு கால​கட்டத்தில், இந்​தக் கதை இன்​றைய சூழலுக்கு மிக​வும் பொருத்தமான​தாக இருக்​கிறது. இந்​தக் கதையைச் சொல்ல வேண்​டும் என்ற இயக்​குநரின் நோக்​க​மும், அதை உயிர்ப்​புடன் திரை​யில் கொண்டு வர வேண்​டும் என்ற ஆர்​வ​மும் என்னை ஊக்கப்படுத்தின. அதனால் இதில் நடித்​தேன்” என்​றார்.

SCROLL FOR NEXT