பாலிவுட்

நடிகர் ரன்வீர் சிங்​கிடம் பணம் கேட்டு மிரட்டல்!

ப்ரியா

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்​. அவர் நடித்து வெளி​யான ‘துரந்தர்’ ரூ.1,300 கோடிக்கு மேல் வசூலித்​துள்​ளது. இப்படத்தின் அடுத்த பாகம் வெளி​யாக இருக்​கிறது. இந்நிலை​யில், அவரிடம் பணம் கேட்டு மிரட்​டல் விடுக்கப்பட்​டுள்​ளது.

ரன்​வீர் சிங்​கின் வாட்​ஸ்​ஆப் எண்ணில், கோடிக்கணக்கான ரூபாய் வேண்​டும் என்று கேட்​டு, மர்மநபர் ஒரு​வர் வாய்ஸ் மெசேஜ் மூலம் மிரட்​டல் விடுத்துள்​ளார். இதுகுறித்து மும்பை போலீஸாரிடம் அவர் புகார் அளித்​தார். அவர்கள் வழக்​குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு​கின்​றனர்.

          

இந்த மிரட்​டலை லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச் சேர்ந்தவர் விடுத்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்து ரன்​வீர் சிங்​கின் வீட்​டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்​படுத்​தப் பட்​டுள்​ளது. தனி​யார் பாதுகாவலர்​களும் அதி​கப்​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

ஏற்கெனவே நடிகர் சல்​மான் கானுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பல் தொடர்ந்து மிரட்​டல் விடுத்து வருகிறது. அதேபோல், பாலிவுட் இயக்​குநர் ரோஹித் ஷெட்டி​யின் வீட்​டுக்கு வெளியே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சில நாட்​களுக்கு முன் துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​யது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT