பிரபல இந்தி நடிகரான அக் ஷய் குமார், அனீஸ் பாஸ்மி இயக்கும் ‘கேரளம்’ என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதில் வித்யா பாலன், ராஷி கன்னா ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில் மும்பையில் அவருக்கு கண் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான ‘பூத் பங்களா’ கடந்த ஏப்.17-ல் வெளியாகி ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து அவர், ‘வெல்கம் டு தி ஜங்கிள்’, ‘கோல்மால் 5’ ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார்.