பாலிவுட்

‘ஆசைகளால் வீசப்​படும் வலை’ - நடிகை தனுஸ்ரீ தத்தா எச்சரிக்கை

ப்ரியா

இந்தி நடிகை​யான தனுஸ்ரீ தத்தா, தமிழில் ‘தீ​ராத விளையாட்டுப் பிள்​ளை’ படத்​தில் நடித்​திருந்​தார். சில வருடங்​களுக்கு முன் ‘மீ டு’ வில் பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியதன் மூலம் பரபரப்​பான இவர், சினி​மா​வில் இருந்து இப்​போது ஒதுங்கி இருக்​கிறார்.

அவர் சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில், சினிமா கனவு​களுடன் வரும் இளம்​பெண்​கள் எப்​படிச் சுரண்​டப்​படு​கிறார்​கள் என்​பது குறித்து எச்​சரித்​துள்​ளார். அவர் கூறும்​போது, “பு​தி​தாக வருபவர்​களைக் கண்​டதும், ‘நீங்​கள் மிகவும் அழகாக இருக்​கிறீர்​கள், பெரிய கதா​நாயகி​யாக வரு​வீர்​கள்’ என்று முதலில் ஆசை வார்த்​தைகளைக் கூறி உசுப்​பேற்​று​வார்​கள்.

          

உங்​கள் திறமை​யைப் பற்றி கவலைப்​ப​டா​மல், பாராட்​டு​வதற்​காகவே சிலர் வரு​வார்​கள். பிறகு, ‘அவரைப் போய் பாருங்​கள், இவரைச் சந்​தி​யுங்​கள்’ என்று கூறி தவறான வழிகளில் திசை திருப்​பு​வார்​கள். இது​தான் இங்கு நடக்கிறது. அறி​முகம் இல்​லாதவர்​கள் சாக்​லேட் கொடுத்தால் வாங்​கக் கூடாது என்று சிறு​வய​தில் பெற்றோர் சொல்​லிக் கொடுத்​ததை நினை​வில் கொள்ளுங்​கள்.

இங்கே கொடுக்​கப்​படு​வது உண்​மை​யான சாக்​லேட் அல்ல; அது உங்​கள் லட்​சி​யங்​களை​யும், ஆசைகளை​யும் முதலீ​டாகக் கொண்டு வீசப்​படும் வலை. ஏராள​மான ஆண்​களும் பெண்​களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்​கள் பயன்​படுத்​தப்​பட்​டு, துஷ்பிரயோகம் செய்​யப்​பட்​டு, பின்​னர் தூக்கி வீசப்படுகிறார்​கள்.

அப்​படி வீசப்​படும்​போது, சிலர் மீள முடி​யாத பாதிப்​புக்கு உள்​ளாகிறார்​கள். சிலர் பாலியல் தொழிலுக்​குத் தள்ளப்படு​கிறார்​கள். இன்​னும் சிலர் மனரீ​தி​யாக உடைந்து, சொந்த ஊருக்​கேத் திரும்பி விடு​கிறார்​கள். இப்படிச் சொல்​வதன் மூலம் குறைந்த பட்​சம் நான்கு பேரின் வாழ்க்​கை​யை​யா​வது காப்​பாற்​றி​னால் அதுவே எனக்கு போதும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT