பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தி படம் ஒன்று தயாராகிறது. இதில் சாய்னா நேவாலாக ஸ்ரத்தா கபூர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதற்காக தீவிர பாட்மிண்டன் பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஆனால், ஸ்ரத்தா கபூர் பல்வேறு படங்களில் நடித்து வந்ததால், சாய்னா நேவால் படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தான் ஒப்புக் கொண்ட படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டதால், சாய்னா நேவால் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியிருக்கிறது. அமொலே குப்தே என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.