சென்னை: இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம், நவம்பர் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வேலூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்துக்கு ஆண்கள், பெண் காவலர்கள், உதவி செவிலியர், தொழில்நுட்ப வீரர் (விலங்குகள்), இளநிலை அதிகாரிகள் (மதபோதக ஆசிரியர்கள்) ஆகிய பணியிடங் களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேலூரில் நடைபெறும்
இதற்கான தேர்வு முகாம், வரும் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வேலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க வரும்விண்ணப்பதாரர்கள் wwwjoinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங் களை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
தமிழகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏற்கெனவே விண்ணப்பித்த விண்ணப்ப தாரர்கள் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.