சென்னை: அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக முகவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வரும் 29-ம் தேதியன்று நடைபெறுகிறது.
சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிதாக முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கல்வி தகுதி குறைந்தது 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-ல் இருந்து இருக்க வேண்டும். சுய தொழில் செய்யும், வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் 3 பாஸ்போர்ட் அளவு புகைப் படத்துடன், அசல் மற்றும் இரண்டு நகல் வயதுச் சான்று, முகவரிச் சான்று மற்றும் கல்விச் சான்று ஆகியவற்றை நேர்காணலின் போது உடன் கொண்டு செல்ல வேண்டும்.
முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வசூலிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 என்ற முகவரியில் உள்ள சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்துக் கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.