வணிகம்

இந்தியா - நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர்கள் மோடி, கிறிஸ்​டோபர் லக்​சன் கூட்டாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி நியூசி லாந்து பிரதமர் கிறிஸ்​டோபர் லக்​சனை நேற்று தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். அப்​போது, இரு நாடு​களுக்​கும் இடை​யில் தடையற்ற வர்த்​தகம் இறுதி செய்​யப்​பட்​ட​தாக அவர்​கள் கூட்​டாக அறி​வித்​தனர்.

இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்​கை:”நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்​டோபர் லக்​சனை திங்​களன்று (நேற்​று) பிரதமர் நரேந்​திர மோடி தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு உரை​யாடி​னார். அப்​போது இரு​நாடு​களுக்​கும் இடையே வரலாற்​றுச் சிறப்பு வாய்ந்த பரஸ்​பரம் பயனளிக்​கும் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் வெற்​றிகர​மாக இறுதி செய்​யப்​பட்​டது குறித்து இரு நாடு​களின் தலை​வர்​களும் கூட்​டாக அறிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்​டோபர் லக்​சன் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​ட​போது, இதற்​கான பேச்​சு​வார்த்​தைகள் தொடங்​கின. இந்த நிலை​யில், 9 மாத காலத்திற்​குள் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் இறுதி செய்யப்பட்டுள்​ளது என்​பது இரு​நாட்டு குறிக்​கோள்​களை பிரதிபலிப்​பதுடன் இருதரப்பு உறவு​களை வலுப்​படுத்​த​வும் உதவிடும் என இரு தலை​வர்​களும் தெரி​வித்​தனர்.

இந்த ஒப்​பந்​தம் இரு நாடு​களின் பொருளா​தார நடவடிக்​கைகள் வலு​வடைய வழி​வகுக்​கும். அத்​துடன், மேம்​பட்ட சந்தை வாய்ப்புகள், முதலீடு​களுக்​கான உத்​வேகம், வலு​வான உத்​தி​சார் ஒத்​துழைப்பு போன்​றவற்​றுக்​கும் வகை செய்​யும்.

இரு நாடு​களை​யும் சேர்ந்த புதுமை கண்​டு​பிடிப்​பாளர்​கள், தொழில் முனை​வோர்​, விவ​சா​யிகள், குறு சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள், மாணவர்​கள் மற்​றும் இளைஞர்​கள் என அனைத்து தரப்​பினருக்​கும் பல்​வேறு துறை​களில் புதிய வாய்ப்புகளை உரு​வாக்க இந்த ஒப்​பந்​தம் பெரிதும் உதவும்.

இரு நாடுகள் இடையே வலு​வான மற்​றும் நம்​பகத்​தன்​மை​யுடன் கூடிய அடித்​தளம் உரு​வாகும். வரும் 5 ஆண்​டு​களுக்​குள் இரு தரப்பு வர்த்​தகத்தை இரட்​டிப்​பாக்​கு​வதற்​கும், அடுத்த 15 ஆண்டுகளுக்​குள் நியூசிலாந்​தில் இருந்து ரூ.1.80 லட்​சம் கோடி அளவிற்கு இந்​தி​யா​வில் முதலீடு செய்​வதற்​கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாய்ப்பு ஏற்​பட்​டுள்​ளது.

கல்​வி, விளை​யாட்​டு, மக்​கள் தொடர்பு உள்​ளிட்ட பல்​வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்​துழைப்பை மேம்​படுத்​த​வும் இரு நாடுகளுக்​கும் இடையே​யான நல்​லுறவை மேலும் வலுப்படுத்தவும் இரு தலை​வர்​களும் ஒப்​புக்​கொண்​டனர்.

இரு நாடு​களின் செயல்​பாடு​கள் குறித்து தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்​து​வது எனவும் அவர்​கள் கூட்​டாக முடிவு செய்​தனர். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT