புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கூறியதாவது: ”தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போதுள்ள சுங்கச்சாவடி கட்டண வசூல் முறை ஓராண்டுக்குள் முடிவுக்கு வரும். அதன்பிறகு, எலக்ட்ரானிக் முறையில் சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கும் நடைமுறை செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படும்.
இதுதேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு எளிதானதாகவும், தடையற்றதாகவும் இருக்கும். இப்புதிய முறை முதலில் 10 இடங்களில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.