வணிகம்

இந்திய மாம்பழங்கள் இறக்குமதிக்கு தடையில்லை: நேபாள அமைச்சகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

காத்மாண்டு: இந்​திய மாம்​பழங்​களின் இறக்​கும​திக்கு தடைவிதிக்​க​வில்லை என்று நேபாள அரசு கூறி​யுள்​ளது.

அதி​கப்​படி​யான பூச்​சிக்​கொல்​லிப் பயன்​பாடு மற்​றும் எல்​லைப் பகு​தி​களில் சோதனை வசதி​கள் இல்​லாத​தால் இந்​திய மாம்பழங்களை இறக்​குமதி செய்ய நேபாள அரசு கட்​டுப்​பாடு விதித்​துள்​ள​தாக சமீபத்​தில் செய்​தி​கள் வெளி​யானது.

குறிப்​பாக, பூச்​சிகள் இருக்​கலாம் என்ற சந்​தேகத்​தின் பேரில், இந்திய மாம்பழ லாரி​கள் சில நாட்​களுக்கு முன்பு மாதேஷ்மாகாண எல்​லை​யில் நிறுத்தி வைக்​கப்​பட்​டன. எனினும், இந்​திய அதி​காரி​களிட​மிருந்து தாவர ஆரோக்​கிய சான்​றிதழ் பெறப்​பட்​டதை அடுத்​து, அவை தற்​போது விடுவிக்​கப்​பட்​டுள்​ளன.

இதனிடையே, இந்​திய மாம்பழ இறக்​கும​தியை நிறுத்​தி​னால் உள்​நாட்டு சந்​தை​யில் பற்​றாக்​குறை ஏற்​படும் என்று ஜனக்​பூர்​தாமில் உள்ள பழங்​கள் மற்​றும் காய்​கறி வியா​பாரி​கள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் புவனேஸ்​வர் பூர்பே எச்​சரித்​திருந்​தார். ஜனக்​பூர்​தா​முக்கு 50 டன்​னுக்​கும் அதி​க​மான மாம்​பழங்​கள் வந்​தா​லும், நாட்​டின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்​ளூர் உற்​பத்தி மட்​டுமே போதாது என்​றும் அவர் கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், நேபாள வேளாண்​மை, வன மற்​றும் சுற்​றுச்​சூழல் அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “இந்​தி​யா​விலிருந்து மாம்​பழங்​களை இறக்​குமதி செய்ய எந்​தக் கட்​டுப்​பாடும் விதிக்கப்படவில்​லை. சில விதி​முறை​களின்​படி தேவை​யின் அடிப்​படை​யில் நேபாள சந்​தைக்​குள் மாம்​பழங்​கள் நுழைவதற்​கான அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது” என்று கூறப்​பட்​டுள்​ளது.

பாதிக்​கப்​பட்ட வேளாண் விளைபொருட்​கள் நுழைவதைத் தடுக்க, உயி​ரியல் பாது​காப்​புச் சட்​டத்​தின் கீழ் இந்​திய மாம்பழங்களை 48 டிகிரி செல்​சி​யஸ் வெந்​நீரில் ஒரு மணி நேரம் வைப்​பது போன்ற சுத்​தி​கரிப்பு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக நேபாள அமைச்​சகம்​ தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT