வணிகம்

மீண்டது இந்திய பங்குச் சந்தை - முதலீட்டாளருக்கு ரூ.6 லட்சம் கோடி லாபம்

செய்திப்பிரிவு

மும்பை: சர்​வ​தேச சந்​தைகளில் நில​விய சாதக​மான சூழலால், இந்தி​யப் பங்​குச்​சந்​தைகள் நேற்று குறிப்பிடத்தக்க முன்​னேற்​றம் கண்​டன.

மேற்கு ஆசி​ய போர்ப் பதற்​றத்​தால் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த மும்பை பங்​குச்​சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், நேற்று வர்த்தக முடி​வில் 899.71 புள்​ளி​கள் (1.14%) உயர்ந்து 80,015.90 புள்ளிகளாக நிலைபெற்றது.

இதே​போல், தேசிய பங்​குச்​சந்தை குறி​யீட்டு எண் நிஃப்​டி, மூன்று நாள் சரிவுக்கு முற்​றுப்​புள்ளி வைத்து 285.40 புள்ளிகள் (1.17%) அதிகரித்து 24,765.90-ல் நிலைகொண்​டது.

          

சென்​செக்ஸ் பட்​டியலில் அதானி போர்ட்​ஸ், லார்​சன் அண்ட் டூப்​ரோ, என்​டிபிசி, ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ், பாரத் எலக்ட்​ரானிக்​ஸ், இண்​டர்​குளோப் ஏவி​யேஷன் ஆகிய நிறு​வனப் பங்​கு​கள் கணிசமாக உயர்ந்தன. இதன்மூலம் முதலீட்டாளருக்கு ரூ.6 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு மத்​திய கிழக்கு நாடு​களில் நிலவி வரும் போர்ச் சூழல் காரண​மாக, உலகச் சந்​தை​யில் கச்சா எண்ணெய் விநி​யோகத்​தில் பாதிப்பு ஏற்பட்டுள்​ளது. இதனால் பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை 83 டாலரை தாண்டி உள்ளது.

SCROLL FOR NEXT