வணிகம்

இந்திய பங்குச் சந்தையில் ஒரே நாளில் முதலீட்டாளருக்கு ரூ.17 லட்சம் கோடி லாபம்

செய்திப்பிரிவு

மும்பை: மேற்கு ஆசியாவில் நிலவிய போர் பதற்​றம் தணிந்​ததைத் தொடர்ந்​து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று ஒரே நாளில் 2,946 புள்ளி​கள் உயர்ந்து முதலீட்​டாளர்​களை மகிழ்ச்​சி​யில் ஆழ்த்​தி​யது. வர்த்தக நேர முடி​வில், சென்​செக்ஸ் 77,562 புள்​ளி​களில் நிலைபெற்​றது.

அதே​போல், தேசிய பங்​குச்​சந்தை குறி​யீட்டு எண் 'நிஃப்​டி' 873 புள்​ளி​கள் அதி​கரித்து 23,997-ல் நிலைகொண்​டது. இந்த உயர்​வால், ஒரே நாளில் முதலீட்​டாளர்​களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.17 லட்​சம் கோடி அளவுக்கு அதி​கரித்​தது.

          

இதனிடையே போர் பதற்​றம் தணிந்​த​தால், சர்​வ​தேச சந்தை​யில் கச்சா எண்​ணெய் விலையும் கடும் சரிவைச் சந்​தித்​துள்​ளது.பிரெண்ட் கச்சா எண்​ணெய் விலை சுமார் 14 சதவீதம் குறைந்​து, ஒரு பேரல் 100 டாலருக்​கும் கீழ் குறைந்து 94 டாலர் என்ற அளவில் வர்த்​தக​மானது. இது இந்தி​யா​வைப் போன்ற இறக்​கும​தி​யைச் சார்ந்த நாடுகளுக்​குச் சாதக​மான அம்​ச​மாகப் பார்க்​கப்​படு​கிறது.

போர் நிறுத்த அறி​விப்​பைத் தொடர்ந்​து, ஆசிய மற்​றும் ஐரோப்​பிய பங்​குச் சந்​தைகளும் லாபத்​துடன் வர்த்தகமாகின. ஜப்​பானின் நிக்கி மற்​றும் தென் கொரியாவின் கோஸ்பி சந்​தைகள் 5 முதல் 6% வரை உயர்ந்​தன.

SCROLL FOR NEXT