வணிகம்

பரஸ்பர நிதி கட்டணங்களை குறைக்க செபி நடவடிக்கை

செய்திப்பிரிவு

மும்பை: இந்​திய பங்கு பரிவர்த்​தனை வாரி​யம் (செபி) பரஸ்பர நிதி கட்டணங்களை குறைக்க நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது.

அதன்​படி டிசம்​பர் 17, 2025 அன்று நடை​பெற்ற செபி​யின் வாரியக் கூட்​டத்​தில் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்ள இந்த திருத்​தப்​பட்ட கட்டமைப்பு பரஸ்பர நிதிக்​கான கட்டண விகிதங்​களை 15 அடிப்படை புள்​ளி​கள் வரை குறைக்​கிறது. பெரும்​பாலான சொத்து வகை​களில் 10 அடிப்​படைப் புள்​ளி​கள் குறைக்கப்பட்டுள்ளன.

மேலோட்​ட​மாக பார்த்​தால் இந்த கட்டண குறைப்பு விகிதம் சிறிய​தாக தோன்​றி​னாலும் நீண்ட கால முதலீட்டு திட்​டங்​களில் அதன் தாக்​கம் கணிச​மான​தாக இருக்​கும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

புதிய கட்​டமைப்​புப்​படி, ரூ.500 கோடிக்​கும் குறை​வான சொத்துகளை நிர்​வகிக்​கும் ஓப்​பன்​ - எண்​டட் ஈக்​விட்டி நிதி​கள் முன்பு இருந்த 2.25 சதவீதத்​திலிருந்து இப்​போது அதி​கபட்​ச​மாக 2.10 சதவீதம் கட்​ட​ண​மாக வசூலிக்​கலாம். இதே சொத்து வரம்​பில் உள்ள கடன் நிதி​களுக்​கான வரம்பு 1.85 சதவீத​மாக குறைக்கப்படும்​.

SCROLL FOR NEXT