வணிகம்

ஒட்டுமொத்த வீட்டுக் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியை தாண்டும்: எஸ்பிஐ தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்​டின் மிகப்​பெரிய வங்​கி​யான எஸ்​பிஐ தலை​வர் சி.எஸ்​.ஷெட்டி பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 2024-25 நிதி​யாண்​டின் முடி​வில் எஸ்​பிஐ வழங்​கி​யுள்ள ஒட்​டுமொத்த வீட்​டுக் கடன் ரூ.8.31 லட்​சம் கோடி​யாக இருந்​தது. இது முந்​தைய ஆண்​டுடன் ஒப்​பிடும்​போது 14.4% அதி​கம். இப்​போது இது ரூ.9 லட்​சம் கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. வங்​கி​யின் ஒட்​டுமொத்த கடனில் இது 20% ஆகும்.

கடன் வளர்ச்​சியை 12%-லிருந்து 14% ஆக அதி​கரித்​துள்​ளோம். அடுத்த நிதி​யாண்​டில் வீட்​டுக் கடன் அளவு ரூ.10 லட்​சம் கோடியைத் தாண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.எஸ்​பிஐ வங்​கி​யின் வீட்​டுக் கடன் அளவு கடந்த 2011 மார்ச் மாதம் ரூ.1 லட்​சம் கோடி​யாக இருந்​தது. இது படிப்​படி​யாக உயர்ந்து இப்​போது (நவம்​பர்) ரூ.9 லட்​சம் கோடி​யாகி உள்​ளது. சில்​லறை, வேளாண்​மை,எம்​எஸ்​எம்இ துறைக்​கான கடன் கடந்த செப்​டம்​பரில் ரூ.25 லட்​சம் கோடியைத் தாண்டி உள்​ளது.

இது ஒட்​டுமொத்த கடனில் 67% பங்கு வகிக்​கிறது. மேலும் இவ்​வங்​கி​யின் வாராக் கடன் அளவும் 1 சதவீதத்​துக்​குக் கீழ் குறைந்​துள்​ளது. குறிப்​பாக வீட்​டுக் கடன் பிரி​வில் வாராக் கடன் அளவு 0.72% ஆக உள்​ளது. மற்ற வங்​கி​களு​டன் ஒப்​பிடும்​போது இது மிக​வும்​ குறைவு ஆகும்​.

SCROLL FOR NEXT