ஒடிசா விவசாயி தேபா போடியாமி தோட்டத்தில் விளைந்துள்ள மியாசாகி மாம்பழங்கள்.

 
வணிகம்

ஒரு கிலோ மாம்பழம் ரூ.3 லட்சம்: இரவு, பகலாக மாமரங்களை பாதுகாக்கும் ஒடிசா விவசாயி

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடி​சா​வின் மால்​கான்​கிரி மாவட்​டம், தமாசா கிராமத்​தைச் சேர்ந்த விவ​சாயி தேபா போடி​யாமி. இவர் தனது தோட்​டத்​தில் 4 ஆண்​டு​களுக்கு முன்பு மியா​சாகி மாமரக் கன்​றுகளை நட்​டார். இந்த மரக்​கன்​றுகள் தற்​போது நன்கு வளர்ந்து காய்த்து குலுங்​கு​கின்​றன.

சர்​வ​தேச சந்​தை​யில் ஒரு கிலோ மியா​சாகி மாம்​பழம் ரூ.1.5 லட்​சம் முதல் ரூ.3 லட்​சம் வரை விற்​பனை செய்​யப்​படு​கிறது. இந்த மாம்​பழங்​களை வாங்க விவ​சாயி தேபா போடி​யாமிடம் இப்​போதே பலர் முன்​ப​திவு செய்​துள்​ளனர். விலை உயர்ந்த மாம்​பழம் என்​ப​தால் அவரது தோட்​டத்தை சுற்றி திருடர்​களின் நடமாட்​டம் அதி​கரித்து வரு​கிறது. இதனால் அவரும் அவரது குடும்​பத்​தினரும் 24 மணி நேர​மும் மியா​சாகி மாமரங்​களுக்கு காவல் காத்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து விவ​சாயி தேபாபோடி​யாமி கூறிய​தாவது: ஜப்​பானைச் சேர்ந்த மியா​சாகி மாமரங்​கள் இந்​திய மண்​ணில் வளர்​வது கடினம். மிகுந்த பராமரிப்பு காரண​மாக எனது தோட்​டத்​தில் இவற்றை வளர்த்து உள்​ளேன். தற்​போது எனது தோட்​டத்​தில் 17 மியா​சாகி மாமரங்​கள் உள்​ளன. இந்த மாமரங்​கள் காய்த்து குலுங்​கு​கின்​றன. ஒவ்​வொரு மாம்​பழ​மும் 350 கிராம் எடை​யில் உள்​ளன. இவை கீழே விழுந்து சேதமடைந்து விடக்​கூ​டாது என்​ப​தற்​காக மரங்​களில் வலைகளை கட்டி வைத்​திருக்​கிறேன்.

முன்பதிவு: எனது தோட்​டத்தை திருடர்​கள் நோட்​ட​மிடு​வது அதி​கரித்து வரு​கிறது. இதன்​காரண​மாக இரவு, பகலாக நானும் எனது குடும்​பத்​தினரும் தோட்​டத்​திலேயே தங்​கி​யிருக்​கிறோம். கடந்த சில வாரங்​களாக இரவில் மியா​சாகி மாமரங்​களுக்கு அடி​யில் தூங்கி வரு​கிறேன். இந்த மாம்​பழங்​களை வாங்க ஒடி​சாவை சேர்ந்த பலர் முன்​ப​திவு செய்​துள்​ளனர். எனினும் அனைத்து மியா​சாகி மாம்​பழங்​களை​யும் விற்க மத்​திய, மாநில அரசுகளின் உதவியை நாடி உள்​ளேன்​. இவ்​வாறு விவ​சா​யி தேபா போடி​யாமி தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT