வணிகம்

பங்​கு​ சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் நவம்​பரில் முதலீடு 21% உயர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்​டங்​களில் பெறப்​பட்ட முதலீடு நவம்​பரில் 21 சதவீதம் அதி​கரித்​துள்​ளது.

இதுகுறித்து இந்​திய பரஸ்பர நிதி​யங்​களின் கூட்​டமைப்பின் புள்ளி​ விவரத்​தில் தெரி​வித்​துள்​ள​தாவது: "பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்​கள் நவம்​பரில் ரூ.29,911 கோடி முதலீடு​களை ஈர்த்​துள்ளன. இது, முந்​தைய அக்​டோபர் மாதத்தை விட 21 சதவீதம் அதிகம்.

ஆகஸ்ட், செப்​டம்​பர், அக்​டோபர் என தொடர்ந்து மூன்று மாதங்களாக பரஸ்பர நிதி திட்​டத்​தில் முதலீடு​கள் குறைந்து வந்த நிலை​யில், நவம்​பரில் அதி​கரித்​துள்​ளது.

இது, முதலீட்​டாளர்​களின் நம்​பிக்கை அதி​கரித்​துள்​ளதை எடுத்​துக்​காட்​டு​வ​தாக அமைந்​துள்​ளது. பங்கு சார்ந்த பரஸ்பர முதலீட்​டில் காணப்​பட்ட இந்த நேர்​மறை​யான உத்​வேகத்​தால் அந்த துறை நிர்வகிக்​கும் சொத்​து​ம​திப்பு நவம்​பரில் ரூ.80.80 லட்​சம் கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. அக்​டோபரில் இது ரூ.79.87 லட்​சம் கோடி​யாக இருந்​தது. நவம்​பரில் எஸ்​ஐபி திட்​டங்​களில் சில்​லறை முதலீட்டாளர்​களின் பங்​கேற்பு சற்று குறை​வாகவே காணப்பட்டது.

அதன்​படி, அக்​டோபரில் ரூ.29,631 கோடி​யாக இருந்த எஸ்​ஐபி முதலீடு நவம்​பரில் ரூ.29,445 கோடி​யாக குறைந்​துள்​ளது. பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்​டத்​தில் ஆகஸ்​டில் ரூ.33,430 கோடி​யும், செப்​டம்​பரில் ரூ.30,421 கோடி​யும் முதலீடு செய்​யப்​பட்​டன. இவ்வாறு கூட்​டமைப்​பு தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT