வணிகம்

இந்தியா, ஈரான் இடையே வர்த்தக பேச்சு நடைபெறவில்லை: அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் தகவல்

செய்திப்பிரிவு

வாஷிங்​டன்: இந்தியா, ஈரான் இடையே வர்த்தக பேச்​சு​வார்த்தை நடை​பெற​வில்லை என்று அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ தெரி​வித்​துள்​ளார்.

ஈரானுடன் வர்த்​தகத்​தில் ஈடு​படும் நாடு​கள் மீது பொருளா​தார தடை விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அரசு எச்​சரிக்கை விடுத்துள்​ளது. குறிப்​பாக ஈரான் சார்ந்த கிரிப்​டோகரன்​சி, தொழில்​நுட்​பங்​கள், தங்​கம், விமான போக்​கு​வரத்​து, கப்​பல் போக்கு​வரத்​துக்கு அமெரிக்கா தடை விதித்​திருக்​கிறது.

இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷெக்​கில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்​டில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யானும் சந்​தித்​துப் பேசினர். இரு தலைவர்​களும் வர்த்தக உறவை மேம்​படுத்​து​வது குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தி​ய​தாக தகவல்​கள் வெளி​யாகின.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ​ கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா, ஈரான் இடையே வர்த்தக பேச்​சு​வார்த்தை நடை​பெற​வில்லை என்று உறு​தி​யாக நம்​பு​கிறேன். எந்தவொரு நாடும் ஈரானுக்கு உதவி செய்​யக்​கூ​டாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கண்​டிப்​புடன் அறி​வுறுத்தி உள்​ளார்.

ஈரானின் வரு​வாயை முடக்க வேண்​டும். இதன்​மூலம் அந்த நாட்டின் தீவிரவாத செயல்​களை தடுத்து நிறுத்த வேண்​டும் என்று அமெரிக்கா விரும்​பு​கிறது. மேலும் ஈரான் அரசு ஒரு​போதும் அணு ஆயுதங்​களை தயாரிக்​கக்​கூ​டாது என்​ப​தி​லும் நாங்​கள் உறுதியாக உள்​ளோம். எனவே ஈரானுடன் வர்த்​தகத்​தில் ஈடு​படும் நாடு​கள் மீது மிகக் கடுமை​யான பொருளா​தார தடைகள் விதிக்கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

ஈரான் தாக்​குதல் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ஈரானின் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் அமைந்​துள்ள லராக் தீவு மீது அமெரிக்க போர் விமானங்​கள் தாக்​குதல் நடத்​தின. இதற்கு பதிலடி​யாக ஜோர்டான், ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஏவு​கணை, ட்ரோன்​கள் மூலம் ஈரான் ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யது. இதைத் தொடர்ந்து ஈரானின் சிரிக், குசெஸ்தான் பகு​தி​களை குறி​வைத்து அமெரக்க ராணுவம் நேற்று முன்​தினம் ஏவு​கணை​களை வீசி​யது. இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். 68 பேர் படு​கா​யம் அடைந்​தனர்.

இதற்கு பதிலடி​யாக வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் ஏவு​கணை, ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது. இரண்டாவது நாளாக நேற்​றும் ஈரான் ராணுவம் தாக்​குதலை தொடர்ந்​தது. இதன்​படி ஐக்​கிய அரபு அமீரகம், குவைத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி​யது. வெடிகுண்​டு​களை சுமந்து சென்ற ஈரானின் ட்ரோன்​கள் அமெரிக்க ராணுவ தளங்​களில் விழுந்து வெடித்​துச் சிதறின. இந்த தாக்​குதலுக்​கு குவைத்​தும்​, ஐக்​கிய அரபு அமீரக​மும்​ கடும்​ கண்​டனம் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT