வணிகம்

‘பாய் பிரண்ட் இல்லையா? கவலையை விடுங்கள்...’ - உங்கள் சுமையை தூக்க புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் ரெடி!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மாநகரச் சந்​தைகளில் நீங்​கள் எப்​போ​தாவது பொருள்​கள் வாங்​கச் சென்​றிருந்​தால், அங்​குள்ள கள நில​வரம் உங்​களுக்கு நன்​றாகவே தெரிந்​திருக்​கும்.

ஒரு கையில் மூன்​றுக்​கும் மேற்​பட்ட பொருள்​கள் அடங்​கிய பைகள், மற்​றொரு கையில் தின்​பண்​டப் பொட்​டலங்​கள், பையி​லிருந்து நழுவி விழும் அலைபேசி, கடுமை​யான வியர்​வை, கட்​டுக்​கடங்​காத மக்​கள் கூட்​டம், இரண்டு விநாடிகளுக்கு ஒரு​முறை “கொஞ்​சம் வழி விடுங்​கள்” என்று உரக்​கக் கத்​தும் குரல்​கள் என அந்த இடமே பரபரப்​பாகக் காணப்​படும்.

லஜ்பத் நகர், சரோஜினி நகர் அல்​லது சாந்​தினி சவுக் என டெல்​லி​யின் எந்​தவொரு பாரம்​பரியமிக்க சந்​தை​யாக இருந்​தா​லும், அங்கு பொருள்​கள் வாங்​கு​வது என்​பது எவ்​வளவு உற்​சாக​மானதோ, அதே அளவுக்கு பெரும் சோர்வை ஏற்​படுத்​தக்​கூடிய​தாகும்.

ஆனால், டெல்​லியைச் சேர்ந்த புதிய தொழில்​முனைவு (ஸ்டார்ட்-அப்) நிறு​வனம் ஒன்று தற்​போது இந்த நிலையை மாற்​றியமைக்க முயன்று வரு​கிறது.

உண்​மை​யைக் கூற வேண்​டுமெனில், சோர்​வடைந்த கணவர்​கள், எரிச்​சலடை​யும் காதலர்​கள், திணறிப்​போகும் தாயார்​கள் மற்​றும் ஒட்​டுமொத்த நுகர்​வோரின் சுமை​யைக் குறைக்​கும் ஒரு வரப்​பிர​சாத​மாக இந்த ஸ்டார்​அப் உரு​வெடுத்​துள்​ளது. பெண்​கள் இனி பாய் பிரண்ட் இல்லை என்று கவலைப்படத் தேவை​யில்​லை.

“கேரிமென்” (CarryMen) என்ற பெயரிலான இந்த வாடிக்​கை​யாளர் உதவிச் சேவை மையம், “நீங்​கள் பொருள்​கள் வாங்​குங்​கள்; சுமையை நாங்​கள் சுமக்​கிறோம்” என்ற எளிய தாரக மந்​திரத்​துடன் செயல்​படு​கிறது. அன்​றாட வாழ்​வில் எதிர்​கொள்​ளும் நடை​முறைச் சிக்​கல் ஒன்​றில் இருந்​து​தான் இந்த வணிக யோசனை பிறந்​துள்​ளது.

டெல்​லியைச் சேர்ந்த இந்​நிறு​வனத்​தின் நிறு​வனர்​கள், சிறு வயது முதற்​கொண்டே தங்​களது குடும்​பத்​தினருடன் இத்​தகைய நெரிசல்​மிக்க சந்​தைகளுக்​குச் சென்ற அனுபவம் கொண்​ட​வர்​கள்.

நீண்ட தூர நடைப்​பயணம், எல்​லை​யற்ற பொருள்​களின் எடை, உணவக வரிசைகள் ஆகிய​வற்​றால் பொருள்​கள் வாங்​கு​வ​தில் உள்ள மகிழ்ச்சி எவ்​வாறு மறைந்​து​போகிறது என்​பதை அவர்​கள் உணர்ந்​தவர்​கள்.

இதுகுறித்து அந்த ஸ்டார்ட்​-அப் நிறு​வனத்​தின் செய்​தித் தொடர்​பாளர் கூறுகை​யில், “மக்​களுக்​குப் பொருள்​கள் வாங்​கு​வது பிடிக்​கும்; ஆனால் அதனால் ஏற்​படும் உடல் ரீதி​யான சோர்வை அவர்​கள் வெறுக்​கிறார்​கள்.

மக்​கள் நெரிசலான சந்​தை​யின் நடு​வில் நின்​று​கொண்​டு, பத்து பைகளைச் சுமப்​ப​தைப் பற்​றிக் கவலைப்​ப​டா​மல், தங்​களுக்​குப் பிடித்​த​மான உணவு​களைச் சுவைத்து மகிழ்​வதையே நாங்​கள் விரும்​பு​கிறோம்” என்​றார்.

கட்டண விவர​மும் சேவை​களும்

இந்​தச் சேவை​யின் கீழ், ஒரு மணி நேரத்​திற்கு ரூ.149 என்ற கட்​ட​ணத்​தில், உதவி​யாளர் ஒரு​வர் வாடிக்​கை​யாளர்​களு​டன் சந்தை முழுவதும் வரு​வார்.

இந்த உதவி​யாளர்கள் பொருள்​களைச் சுமப்​பது மட்​டுமன்​றி, கடைகளுக்கு வழிநடத்​து​வது, உணவக வரிசைகளில் காத்​திருப்​பது, வாகன நிறுத்​து​மிடம் அல்​லது மெட்ரோ ரயில் நுழை​வா​யில் வரை பொருள்​களைக்கொண்டு வந்து சேர்ப்​பது மற்​றும் வாடிக்​கை​யாளர்​கள் ஓய்​வெடுப்​ப​தற்​கான இடங்​களைக் கண்​டறிவது உள்​ளிட்ட உதவி​களைச் செய்​கின்​றனர். இதன் மூலம் வாடிக்​கை​யாளர்​கள் நிம்​ம​தி​யாக உலா வர முடி​யும்.

SCROLL FOR NEXT