மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் சரிவில் முடிந்தன. வார அளவில் பார்க்கும்போது, பிஎஸ்இ சென்செக்ஸ் 639.61 புள்ளிகள் (0.84%) மற்றும் என்எஸ்இ நிஃப்டி 171.55 புள்ளிகள் (0.72%) சரிவடைந்தன.
இதனால் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் சுமார் ரூ.1.54 லட்சம் கோடி சரிந்தது. இதில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிக அதிக அளவாக ரூ.46,078 கோடி இழப்பை சந்தித்தது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.17,87,039 கோடியாக உள்ளது.
ஹெச்டிஎஃப்சி பேங்க் ரூ.33,333.06 கோடி குறைந்து, ரூ.11,46,641.84 கோடியாக சரிந்தது. பார்தி ஏர்டெல் சந்தை மதிப்பு ரூ.25,408.96 கோடி சரிந்து, ரூ.11,14,886.53 கோடியாக உள்ளது. டிசிஎஸ் மதிப்பு ரூ.22,920.58 கோடி, இந்துஸ்தான் யுனிலீவர் சந்தை மதிப்பு ரூ.13,169.46 கோடி, பஜாஜ் ஃபைனான்ஸ் சந்தை மதிப்பு ரூ.7,253.24 கோடி, ஐசிஐசிஐ பேங்க் சந்தை மதிப்பு ரூ.6,311.41 கோடி சரிந்தது.