வணிகம்

ஜார்க்கண்ட், பிஹாரில் ரூ.20,000 கோடி வரி வசூல்: அதிக வரி செலுத்தியதில் எம்.எஸ்.தோனி முதலிடம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் எம்​.எஸ்​. தோனி, 2025-26 நிதி​யாண்​டில் பிஹார், ஜார்க்​கண்ட் ஆகிய 2 மாநிலங்​களி​லும் சேர்த்​து, தனி​நபர் பிரி​வில் அதிக வரி செலுத்​தி​ய​வ​ராக இருக்​கிறார்.

பிஹார் - ஜார்க்​கண்ட் வருமான வரித்​துறை முதன்மை தலைமை ஆணை​யர் டாக்​டர் டி.சு​தாகர ராவ், ராஞ்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று முன்​தினம் கூறும்​போது, “கடந்த 2025-26 நிதி​யாண்​டில் பிஹார் மற்​றும் ஜார்க்​கண்ட் மாநிலங்​களில் இருந்து வசூலிக்​கப்​பட்ட மொத்த வரி சுமார் ரூ.20,000 கோடி ஆகும். இதில் ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் இருந்து மட்​டும் ரூ.12,000 கோடி வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

இரு மாநிலங்​களி​லும் சேர்த்து தனி நபர் பிரி​வில் அதிக வரி செலுத்​தி​ய​வர்​கள் பட்​டியலில் இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் தோனி முதலிடம் பிடித்​துள்​ளார்’’ என்​றார். எனினும், தோனி செலுத்​திய வரித் தொகையை வெளி​யிட அவர் மறுத்​து​விட்​டார். வரு​மான வரித் துறை​யின் கூற்​றுப்​படி, இரு மாநிலங்​களின் மொத்த வரி வசூலில் ஜார்க்​கண்ட் மட்​டும் கிட்​டத்​தட்ட 60 சதவீதப் பங்​களிப்பை வழங்​கி​யுள்​ளது. ஒட்​டுமொத்த வரு​வா​யில் சுமார் 70% டிடிஎஸ் மூலம் கிடைத்​துள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

நிறு​வனங்​கள் பிரி​வில், சென்ட்​ரல் கோல்ஃபீல்ட்ஸ் (சிசிஎல்), பாரத் கோக்​கிங் கோல் (பிசிசிஎல்), மத்​திய சுரங்க திட்​ட​மிடல் மற்​றும் வடிவ​மைப்பு நிறு​வனம் (சிபிஎம்​பிடிஐ) ஆகியவை அதிக வரி செலுத்​தி​யுள்​ளன. கடந்த நிதி​யாண்​டில் ஜார்க்​கண்​டில் பெய்த கனமழை​யால் சுரங்​கத் தொழில்​கள் பாதிக்​கப்​பட்​ட​தாக​வும், இது வரி வசூல் புள்​ளி​விவரங்​களில் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​ய​தாக​வும் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். அந்​தப் பிராந்​தி​யத்​தில் பான் கார்டு வைத்​திருப்​பவர்​களுக்​கும், வரி செலுத்​துபவர்​களுக்​கும் இடையே பெரும் இடைவெளி இருப்​ப​தை​யும் வரு​மான வரித்​துறை வெளிப்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT