சென்னை: இந்திய தேசியப் பங்குச் சந்தை உறுப்பினர்கள் சங்கத்தின் (ANMI) 15-வது சர்வதேச மூலதனச் சந்தை மாநாடு 2026 சென்னையில் நடைபெற்றது.
இதில் இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் துஹின் காந்த பாண்டே பேசியதாவது: "இந்தியாவின் மூல தனச் சந்தைகள், பங்குச் சந்தை, டெரிவேட்டிவ்ஸ், பரஸ்பர நிதிகள், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் (ஆர்இஐடி), உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்கள் என அனைத்துத் துறைகளிலும் பெரும் எழுச்சி கண்டு வருகிறது.
குறிப்பாக, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2020-ல் 4.3 கோடியாக இருந்த முதலீட்டாளர் எண்ணிக்கை இப்போது 3 மடங்கு அதிகரித்து 13.7 கோடியாகி உள்ளது. இதுபோல நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 311 நிறுவனங்கள் புதிய பங்குகளை வெளியிட்டு (ஐபிஓ) ரூ.1.7 லட்சம் கோடி திரட்டி உள்ளன. இவ்வாறு துஹின் காந்த பாண்டே கூறினார்.