வணிகம்

அடிப்படைக் கட்டமைப்பு வசதித் திட்டங்களுக்கான நிதியை உயர்த்த வேண்டும்: தொழில்துறை தலைவர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் பிப்​ர​வரி 1-ம் தேதி 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான மத்​திய அரசின் பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட​வுள்​ளது. இதையொட்டி மத்​திய அரசுக்கு தொழில்​துறை தலை​வர்​கள் கோரிக்​கை விடுத்து வரு​கின்​ரனர்.

இதுதொடர்​பாக லாஜிஸ்​டிக்ஸ் துறை திறன் கவுன்​சில் (எல்​எஸ்​சி) தலை​மைச் செயல் அதி​காரி ரவி​காந்த் யமார்த்தி வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறும்​போது, “கடந்​தாண்டு அடிப்​படைக் கட்​டமைப்பு வசதித் திட்​டங்​களுக்​காக மத்​திய அரசு ரூ.1.5 லட்​சம் கோடியை ஒதுக்​கியது. எனவே, வரும் நிதி​யாண்​டில் இந்​தத் தொகையை ரூ.3 லட்​சம் கோடி​யாக அதி​கரிக்க வேண்​டும். இதன்​மூலம் நெடுஞ்​சாலை, நகர்ப்​புற போக்​கு​வரத்​து, சிறு நகரங்​கள் மேம்​பாடு ஆகிய திட்​டங்​களை மேற்​கொள்ள முடி​யும்.

          

இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்​சிக்கு முக்​கிய தளமாக தளவாடத் துறை(லாஜிஸ்​டிக்​ஸ்) உரு​வெடுத்து வரும் நிலை​யில், வளர்ச்​சி, வேலை​வாய்ப்பு உரு​வாக்​கம் மற்​றும் தற்​சார்பு இந்​தியா ஆகிய​வற்​றில் புதிய அளவு​கோல்​களை அமைப்​ப​தற்கு 2026-27-ம் ஆண்​டுக்​கான பட்​ஜெட் ஒரு தீர்க்​க​மான வாய்ப்பை நமக்கு வழங்​க வேண்​டும்” என்​றார்.

சஞ்​சய் கோடாவத் குழு​மங்​களின் நிர்​வாக இயக்​குநர்ஷிரேனிக் கோடாவத் கூறும்​போது, “நமது நாட்​டில் நிலை​யான அடிப்​படை உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களை கொண்டுவரும்​போது அது முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​கும், போட்​டித்​திறனை அதி​கரிப்​ப​தற்​கும், வளர்ச்​சிப் பலன்​கள் அனைத்​துப் பகு​தி​களை​யும் சென்​றடைவதை உறுதி செய்​வதற்​கும் முக்​கிய​மான​தாக அமை​யும்.

குறிப்​பாக குளிர்பதன கிடங்குவசதி​கள் மற்​றும் பொருட்​களைக் கொண்டு செல்​வதற்​கான முறையான வழித்​தடங்​களில் முதலீடு​களை ஊக்​குவிக்க வேண்​டும். எனவே, உள்​கட்​டமைப்பு மேம்​பாட்​டுக்கு பட்​ஜெட்​டில் அதிக நிதியை மத்​திய அரசு ஒதுக்க வேண்​டும்​” என்​றார்​.

SCROLL FOR NEXT