வணிகம்

‘எனக்காக சம்பாதிக்கவில்லை... வேறு யாருக்கோ’ - ரூ.1.14 கோடி வருமான வரி செலுத்தியவரின் கருத்து குறித்து விவாதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு ஆண்​டில் ரூ.1.14 கோடி வருமான வரி செலுத்தி​யுள்​ள​தாகத் தெரி​வித்​துள்ள இந்​தி​யர் ஒரு​வர், “இவ்​வளவு அதிக தொகையை வரி​யாகச் செலுத்​து​வது, நான் எனக்​காக உழைக்​காமல் வேறு யாரோ ஒரு​வருக்​காக உழைப்​ப​தைப் போன்ற உணர்வை ஏற்​படுத்​துகிறது” என்று கூறியுள்​ளார்.

‘@poojaofficial5’ என்ற ‘எக்​ஸ்’ பக்க கணக்கில் பகிரப்​பட்ட இந்த பதிவில், தான் செலுத்திய வரு​மான வரி கணக்​குத் தாக்​கலின் சுருக்​க புகைப்​படத்​தை​யும், ரூ.1.14 கோடி வரி செலுத்தியுள்ளதையும் தெளி​வாகக் குறிப்​பிட்​டுள்​ளார்.

அத்​துடன் தனது பதி​வில், “அமெரிக்​கா​வில் இருந்து எனக்​குப் பல்வேறு வேலை வாய்ப்​பு​கள் வந்​த ​போ​தி​லும், எனது வயதான பெற்றோரைக் கவனித்​துக் கொள்​வதற்​காக நான் இந்தியாவிலேயே தங்க முடிவு செய்​தேன்.

நாட்​டின் மீது மதிப்​பு உள்ளதால், வெளி​நாடு செல்​லும் எண்​ண​மும் எனக்கு இல்​லை. என்​றாலும், அரசுக்கு அதிக அளவில் வரி செலுத்​தும் நேர்​மை​யான வரி செலுத்​து​வோரின் கவலைகள் தொடர்ந்து கண்டுகொள்ளப்படா​மலேயே விடப்​படு​கின்​றன” என்று குறிப்பிட்டுள்​ளார்.

அவர் எழுப்​பி​யுள்ள இந்த கேள்​வி, இணைய பயனர்​கள் மத்​தி​யில் பெரும் விவாதத்​தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அதிக அளவில் வரி செலுத்​தும் குடிமக்​களுக்​கு, அதற்கு இணை​யான தரமான பொதுச் சேவை​கள், உள்​கட்​டமைப்பு வசதி​கள், வெளிப்​படை​யான நிர்​வாகம் மற்​றும் பொறுப்​புடைமை கிடைக்​கிறதா என்​பது குறித்​துப் பலரும் விவா​தித்து வரு​கின்​றனர்.

அதில் ஒரு பயனர், “நாட்​டின் வளர்ச்சி மற்​றும் மக்​கள் நலனுக்கு வரி செலுத்​து​வது நமது கடமை​. ஆனால், வரி செலுத்​துபவர்​கள் அதற்​குப் பதிலாக வெளிப்​படைத்​தன்​மை​யை​யும் சிறந்த பொதுச் சேவை​களை​யுமே எதிர்​பார்க்​கிறார்​கள். நாம் பங்​களிக்​கும் வரித் தொகைக்​கும் நமக்​குக் கிடைக்​கும் நன்​மை​களுக்​கும் இடையே சமநிலை இருக்க வேண்​டும்,” எனப் பதி​விட்​டுள்​ளார்.

மற்​றொரு பயனர், “நாம் செலுத்​தும் வரி​யின் அளவிற்கு ஏற்ப, மருத்​து​வக் கட்​ட​ணம், கல்விக்​கட்​ட​ணம் போன்​றவற்​றில் குறிப்பிட்ட தொகையை திரும்​பப் பெறும் வகை​யில் அரசு புதிய சட்​டத்​தைக் கொண்டு வர வேண்​டும்,” என்​று யோசனை தெரிவித்துள்ளார்​.

SCROLL FOR NEXT