படம்: மெட்டா ஏஐ 
வணிகம்

வாரத்தின் முதல் நாளில் தங்கம் புதிய உச்சம்; வெள்ளி விலையும் உயர்வு!

அனலி

சென்னை: வாரத்தின் முதல் நாளிலேயே ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகி​றது. அந்த வகையில், டிச.15-ல் ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்கப்பட்டது. இதன் பிறகு, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. டிச.27-ல் ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 ஆக உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஜன.13-ல் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 360-ஆகவும், ஜன.14-ல் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 240 ஆகவும் என அடுத்தடுத்து உயர்ந்து, புதிய உச்சத்தை பதிவு செய்தது. 

இந்நிலையில் இன்று (ஜன.19) தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்தைத் தாண்டி மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,450-க்கும், பவுனுக்கு ரூ.1,360 ரூபாய் உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,07,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.318-க்கும், கட்டி வெள்ளி ரூ.3,18,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தை பிறந்துவிட்டதால் திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்வுகள் களைகட்டும் என்பதால் உள்நாட்டில் தங்கம் விலை இன்னும் உயரும் என்று கணிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT