வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு!

வேட்டையன்

சென்னை: சென்னையில் இன்று (நவ.19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 என உயர்ந்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 என உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு என சர்​வ​தேச நில​வரத்​துக்கு ஏற்ப தங்கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​வது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்​.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்​டது. பின்னர் தங்கம் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது.

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,500-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.92,000-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,00,368 மற்றும் 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.76,800-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த 14-ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையும் உயர்வு: சென்னையில் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,73,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.

SCROLL FOR NEXT