வணிகம்

மீண்டும் ரூ.1.17 லட்சத்தை தாண்டியது தங்கம்: வியாபாரிகள் சொல்வது என்ன?

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,080 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று மீண்​டும் ரூ.1 லட்​சத்து 17 ஆயிரத்தை தாண்​டியது. ஒரே​ நாளில் பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்​து, ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 440-க்கு விற்​கப்​பட்​டது. இதனால், நகைப்பிரியர்​கள் அதிர்ச்​சி​யடைந்​துள்​ளனர்.

சர்​வ​தேச பொருளா​தா​ரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கி​றது. அந்த வகை​யில், கடந்த ஆண்டு டிச.15-ல் ஒரு பவுன்ஆபரணத் தங்​கம் ரூ.1 லட்​சத்து 120-க்கு விற்​கப்​பட்​டது.

          

இந்த ஆண்டு தொடக்​கத்​தில் விலை சற்று இறங்​கி​னாலும், பின்​னர் தங்​கம் விலை படிப்​படி​யாக உயர்ந்​தது. குறிப்​பாக, ஜன. 29-ம் தேதி வரலாறு காணாத வகை​யில் ஒரு பவுன் தங்​கம் ரூ.1 லட்​சத்து 34 ஆயிரத்து 400-ஆக அதி​கரித்​தது. தொடர்ந்​து, ஏற்ற இறக்​க​மாக இருந்து வந்த தங்​கம் விலை கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை குறைந்து வந்​தது. குறிப்​பாக, கடந்த 18-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.1 லட்​சத்து 13 ஆயிரத்து 830-ஆக இருந்​தது. 19-ம் தேதி ரூ.1 லட்​சத்து 16 ஆயிர​மாக​வும், 20-ம் தேதி ரூ.1 லட்​சத்து 15 ஆயிரத்து 360 ஆகவும் இருந்​தது.

இந்​நிலை​யில், ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று மீண்​டும் ரூ.1 லட்​சத்து 17 ஆயிரத்தை தாண்​டியது. பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்​து, ரூ.1 லட்​சத்து 17 ஆயிரத்து 440-க்கு விற்​கப்​பட்​டது. இதனால், நகைப் பிரியர்​கள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். ஒரு கிராம் தங்​கம் ரூ.260 உயர்ந்து ரூ.14,680-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

இதே​போல, 24 காரட் தங்​கம் ரூ.1 லட்​சத்து 28 ஆயிரத்து 112-க்கு விற்​கப்​பட்​டது. வெள்ளி கிரா​முக்கு ரூ.20 உயர்ந்​து, ரூ.290 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்ந்​து, ரூ.2 லட்​சத்து 90 ஆயிர​மாக​வும் இருந்​தது.

விலை உயர்வு குறித்து சென்னை தங்​கம் மற்​றும் வைர நகை வியாபாரிகள் சங்​கப் பொதுச் செய​லா​ளர் எஸ்​.​சாந்​தக்​ கு​மார் கூறிய​தாவது: சர்​வ​தேச அளவில் தங்​கம் விலை​யில் நிலை​யற்ற தன்மை உள்​ளது. ஒவ்​வொரு நாளும் வெளி​யாகும் வெவ்​வேறு அறி​விப்​பு​கள் தங்​கம் விலை​யில் தாக்​கத்தை ஏற்​படுத்​துகின்​றன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த உலகளா​விய வரி விதிப்பு ஒப்​பந்​தம் சட்​ட​விரோத​மானது என்று கூறி, அமெரிக்க உச்ச நீதி​மன்​றம் கடந்த 20-ம் தேதி அதை ரத்து செய்​தது. இதற்கு மாற்​றுத் திட்​டம் இருப்​ப​தாக ட்ரம்ப் தெரி​வித்​தார்.

இதுத​விர, அணு ஆயுத ஒப்​பந்​தத்​தில் 10 நாட்​களில் கையெழுத்​திட ஈரானுக்கு அமெரிக்கா கெடு விதித்​துள்​ளது. மேலும், மத்​தி​யக்கிழக்கு நாடு​கள் அருகே தனது படைகளை​யும் அமெரிக்கா தயார் நிலை​யில் வைத்​துள்​ளது. இதற்கு பதிலடி கொடுக்​கும் வகை​யில், வளை​கு​டா​வில் ரஷ்​யா​வுடன் இணைந்து ஈரான் கூட்​டுப் பயிற்​சி​யில் ஈடு​படு​கிறது. இதனால், அமெரிக்கா மற்​றும் ஈரான் இடையே மீண்​டும் பதற்​ற​மான சூழல் உரு​வாகி​யுள்​ளது. இது ​போன்ற காரணங்​களால், தங்​கத்​தின் மீது முதலீடு செய்​வது அதி​கரித்து வரு​கிறது. எனவே, தங்​கம் விலை உயர்ந்​துள்​ளது.

தொழில் துறை​யில் வெள்​ளி​யின் தேவை அதி​கரிப்​ப​தால், அதன் விலை​யும் உயர்ந்து வரு​கிறது. ஒரிரு வாரங்​கள்​ வரை தங்​கம்​ விலை ஏற்​ற இறக்​க​மாக இருக்​கும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT