வணிகம்

2027-ல் ஜிடிபி 6.7% ஆக உயரும்: எஸ் அண்டு பி குளோபல் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அடுத்த நிதி​யாண்​டில் இந்​திய பொருளா​தார வளர்ச்சி 6.7% ஆக இருக்​கும் என்று எஸ் அண்ட் பி குளோபல் தெரிவித்துள்ளது.

எஸ் அண்ட் பி குளோபல் ரேட்​டிங் நிறு​வனம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி அடுத்த 2 ஆண்​டு​களுக்கு சிறப்​பாக இருக்​கும். நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) 7.8% ஆக இருந்​தது. இது முந்​தைய 5 காலாண்​டு​களில் இல்​லாத அளவாகும். இரண்​டாவது காலாண்டு ஜிடிபி விவரம் விரை​வில் வெளி​யாக உள்​ளது.

இதனிடையே, இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா கூடு​தல் வரி விதித்​துள்​ளது. ஆனாலும், இந்​தி​யா​வில் தனி​நபர் வரு​மான வரி மற்​றும் ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​டது. அத்​துடன் வட்டி விகிதம் குறைக்​கப்​பட்​டது. இது​போன்ற பல காரணங்​களால் இந்​தி​யா​வில் நுகர்வு அதி​கரிக்​கும். இதனால், நடப்பு 2025- 26 நிதி​யாண்​டில் இந்​திய பொருளா​தா​ரம் 6.5% வளரும்.

அதே​நேரம் அடுத்த 2026- 27 நிதி​யாண்​டில் இந்​திய ஜிடிபி 6.7% வளரும் என எதிர்​பார்க்​கிறோம். அமெரிக்​கா, இந்​தியா இடையே தாராள வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​பட்​டால் மேலும் நம்​பிக்கை அதிகரிக்​கும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. நடப்பு நிதியாண்டில் இந்​தி​யா​வின் ஜிடிபி 6.8 சதவீத​மாக இருக்​கும் என இந்​திய ரிசர்வ் வங்கி கணித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT