கோப்புப்படம்

 
வணிகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 4 நாட்கள் வண்ணமீன் வர்த்தக திருவிழா

செய்திப்பிரிவு

சென்னை: பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்​டு, ஜன.15 முதல் 18-ம் தேதி வரை வண்ணமீன் வர்த்தக திரு​விழா நடை​பெறவுள்​ளது.

இது குறித்​து, சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: கொளத்​தூர் பகு​தி​யில் உற்​பத்தி செய்​யும் வண்ணமீன்களை எளி​தாக சந்​தைப்​படுத்​திட​வும், வண்ணமீன் வர்த்​தகத்தை அதி​கரித்​திட​வும், சர்​வ​தேச தரத்​திலான வண்ணமீன் வர்த்தக மையம் ரூ.53.50 கோடி செல​வில், வில்​லி​வாக்​கம், சிவசக்​திநகர் பகு​தி​யில் 3.94 ஏக்​கர் பரப்​பள​வில் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு வண்ணமீன் வர்த்தக திரு​விழா வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 4 நாட்​களுக்கு கொளத்​தூர் வண்ணமீன் வர்த்தக மையத்​தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை நடை​பெற உள்​ளது.

இத்​திரு​விழா​வில், வண்ணமீன் காட்​சி​யகம், பேச்சு போட்​டி, ஓவிய போட்​டி, கோலப்​போட்​டி, விநாடி வினா போட்டி மற்​றும் இதர பல்​வேறு நிகழ்ச்​சிகள் நடை​பெறவுள்​ளன. இத்​திரு​விழா​வில், பொது​மக்​கள் கலந்​து​கொள்​வதற்கு இலவச அனு​மதி உண்​டு.

எனவே, பொது​மக்​கள் மற்​றும் மாணவர்​கள் வண்ணமீன் வர்த்தக திரு​விழா-​வில் கலந்​து​ கொண்​டு பயன்​பெறலாம்​. இவ்​​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT