வணிகம்

வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம், வெள்ளி விலை உயர்வு!

அனலி

சென்னை: வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்கிழமை) சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அமெரிக்​கா​வில் இறக்குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது.

கடந்த 15-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.1,00,120 என விற்பனையானது. 

இந்நிலையில் இன்று (டிச.22) தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தின்போது, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும், பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு பவுன் ரூ.99,840-க்கும் விற்பனையாகிறது. அந்த வகையில் தங்கம் மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு மிக அருகில் நெருங்கிவிட்டது.

வெள்ளி விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.231-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT