வணிகம்

பிஎஸ்என்எல் சார்பில் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை அனைத்து வட்​டங்​களி​லும் பிஎஸ்​என்​எல் அறி​முகம் செய்​துள்​ளது.

இந்​தி​யா​வின் முதன்​மையான அரசு தொலைத் தொடர்பு நிறு​வன​மான பிஎஸ்​என்​எல், வைஃபை அழைப்பு எனப்​படும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை இந்​தப் புத்​தாண்​டில் அறி​முகம் செய்​துள்​ளது. இந்த மேம்​பட்ட சேவை இப்​போது நாட்​டின் ஒவ்​வொரு தொலைத்​தொடர்பு வட்​டத்​தி​லும் உள்ள அனைத்து பிஎஸ்​என்​எல் வாடிக்​கை​யாளர்​களுக்​கும் கிடைக்​கும், இது சவாலான சூழல்​களி​லும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்​யும்.

வைஃபை நெட்​வொர்க் மூலம் குரல் அழைப்​பு​கள் மற்​றும் செய்​தி​களை அனுப்​ப​வும் பெற​வும் இது உதவு​கிறது. வீடு​கள், அலு​வல​கங்​கள், அடித்​தளங்​கள், தொலை​தூரப் பகு​தி​கள் போன்ற பலவீன​மான மொபைல் சிக்​னல் உள்ள இடங்​களில் தெளி​வான மற்​றும் நம்​பக​மான இணைப்பை இது உறுதி செய்​கிறது. இதற்​குக் கூடு​தல் கட்​ட​ணம் எது​வும் இல்​லை.

வாடிக்​கை​யாளர்​கள் தங்​கள் செல்​பேசிகளில் வைஃபை காலிங் என்​பதை மட்​டும் செட்​டிங்ஸ் அமைப்​பில் இயக்க வேண்​டும். வாடிக்​கை​யாளர்​கள் சாதன இணக்​கத்​தன்மை மற்​றும் உதவிக்​கு, அரு​கிலுள்ள பிஎஸ்​என்​எல் வாடிக்​கை​யாளர் சேவை மையத்​துக்கு செல்​லலாம் அல்​லது 18001503 என்ற பிஎஸ்​என்​எல் உதவி எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம். இத்​தகவல் பிஎஸ்​என்​எல் செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT