வணிகம்

ஆரோவில் அறக்கட்டளைக்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்​கிரஸ் எம்​.பி. திக்​விஜய் சிங் தலை​மையி​லான நாடாளு​மன்ற நிலைக் குழு (கல்​வி) நாடாளு​மன்​றத்​தில் கடந்த வாரம் ஒரு அறிக்​கையை தாக்​கல் செய்​தது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: "புதுச்​சேரி​யில் உள்ள ஆரோ​வில் அறக்​கட்​டளையை ‘தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நிறு​வனம்' என அங்​கீகரிக்க வேண்​டும் என்​பது நீண்​ட​கால கோரிக்​கை. இதை 1966 முதல் யுனெஸ்கோ ஆதரித்து வரு​கிறது. அத்​துடன் அதன் பங்களிப்பை அங்​கீகரித்து பல தீர்​மானங்​களை யுனெஸ்கோ நிறைவேற்றி உள்​ளது.

இதையெல்​லாம் கருத்​தில் கொண்​டு, 1988-ம் ஆண்​டின் ஆரோ​வில் அறக்​கட்​டளைச் சட்​டத்​தில் திருத்​தம் செய்​வது பற்றி மத்​திய அரசு பரிசீலிக்​கலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் ‘தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நிறு​வனம்'(ஐஎன்ஐ) என்​பது நாடாளு​மன்​றச் சட்​டத்​தின் மூலம் அறிவிக்​கப்​பட்ட ஒரு முதன்​மை​யான உயர்​கல்வி அமைப்​பாகும். இது முக்​கிய துறைகளில் நிபுணர்​களை உரு​வாக்​கு​வதற்​கும், நாட்​டின் வளர்ச்சிக்கும் மிக முக்​கிய​மான​தாகக் கருதப்​படு​கிறது என்​பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT