வணிகம்

எரிபொருள் விலை உயர்வால் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய சூழல் - மத்திய அரசுக்கு விமான நிறுவனங்கள் அவசர கடிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய கிழக்கு நாடு​களில் நிலவி வரும் போர்ச் சூழல் காரண​மாக, விமான எரிபொருள் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்​துள்​ளது. இதனால், இந்​திய விமானப் போக்​கு​வரத்துத் துறை கடும் நெருக்​கடிக்கு உள்​ளாகி​யுள்​ளதுடன், பல நிறு​வனங்​கள் தங்​களது சேவை​களை நிறுத்​தும் நிலைக்​குத் தள்ளப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​வித்​துள்​ளன.

இது தொடர்​பாக ஏர் இந்​தி​யா, இண்​டிகோ மற்​றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறு​வனங்​களை உள்​ளடக்​கிய இந்​திய விமான நிறுவனங்களின் கூட்​டமைப்பு , மத்​திய விமானப் போக்​கு​வரத்து அமைச்​சகத்​துக்கு கடந்த 26ம் தேதி அவசரக் கடிதம் ஒன்றை எழுதி​யுள்​ளது.

அதில் கூறப்​பட்​டுள்ள முக்​கிய அம்​சங்​கள்: விமான நிறுவனங்களின் மொத்த இயக்​கச் செல​வில் சுமார் 40 சதவீதம் எரிபொருளுக்​காகவே செல​விடப்​படு​கிறது. தற்​போது நில​வும் சூழலில், எரிபொருள் விலை உயர்​வு, விமான நிறு​வனங்​களுக்கு ஈடு​கட்ட முடி​யாத இழப்பை ஏற்​படுத்​தும். இது அதிக எண்ணிக்கையி​லான விமானச் சேவை​களை ரத்து செய்​வதற்கு வழி​வகுக்​கும்.

இப்​போதைய இக்​கட்​டான சூழலில் இருந்து மீண்டு வரவும், சேவை​களைத் தொடர்ந்து தொய்​வின்றி வழங்​க​வும் மத்​திய அரசு உடனடி​யாக நிதி ரீதியி​லான ஆதரவை வழங்க வேண்​டும். குறிப்பாக, உள்​நாட்டு மற்​றும் சர்​வ​தேசச் சேவை​களுக்​கான எரிபொருள் விலை​யில் உள்ள முரண்​பாடு​களைக் களைந்​து, சீரான விலைக் கொள்​கையை கடைப்​பிடிக்க வேண்​டும்.

வரி விலக்கு கோரிக்கை: சர்​வ​தேச அளவில் கச்சா எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய​வற்​றால் விமான நிறு​வனங்​கள் இரட்​டைப் பாதிப்​பைச் சந்​தித்து வரு​கின்​றன. எனவே, விமான எரிபொருள் மீதான 11 சதவீதக் கலால் வரியைத் தற்​காலிக​மாக நிறுத்திவைக்க வேண்​டும். இவ்​வாறு அந்​தக்​ கடிதத்​தில்​ கோரப்பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT