வணிகம்

வின்ஸோ கேமிங் நிறுவனத்தின் மேலும் ரூ.192 கோடி முடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆன்​லைன் கேமிங் தளமான வின்ஸோ (WinZO) தடை செய்​யப்​பட்ட ஆன்​லைன் சூதாட்ட விளை​யாட்​டு​களை நடத்​தவ​தாக புகார் எழுந்​தது.

இது தொடர்​பாக, அமலாக்​கத் துறை வழக்கு பதிவு செய்​தது. இந்த வழக்​கில் அமலாக்​கத் துறை தனது முதல் கட்ட சோதனையை நவம்​பர் மாதம் நடத்​தி​யது. அப்​போது, வின்ஸோ கேம்ஸ் வசமிருந்த சுமார் ரூ.505 கோடி மதிப்​பிலான பத்​திரங்​கள், நிலை​யான வைப்​புத்​தொகை மற்​றும் பரஸ்பர நிதி​களை முடக்கியதாகத் தெரி​வித்​திருந்​தது.

இதுதொடர்​பாக வின்ஸோ நிறு​வனத்​தின் நிறு​வனர்​களான சவுமியா சிங் ரத்​தோர் மற்​றும் பவன் நந்தா ஆகியோர் கைது செய்​யப்பட்டனர். பெங்​களூரு நீதி​மன்​றம் சில நாட்​களுக்கு முன்பு சவுமியா சிங் ரத்​தோருக்கு மட்டும் ஜாமீன் வழங்​கியது. இந்​நிலை​யில், வின்​ஸோ-​வின் கணக்கு தணிக்கை நிறு​வனத்​தில் அமலாக்​கத்​துறை நேற்று சோதனை நடத்​தி​யது.

இதுகுறித்து அமலாக்​கத் துறை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “வின்ஸோ நிறு​வனத்​தின் இந்​தி​யத் துணை நிறு​வன​மான இசட்ஓ கேம்ஸ் வசமிருந்த, வங்கி இருப்பு, வைப்புத் தொகை உட்பட சுமார் ரூ.192 கோடி மதிப்​பிலான சொத்​துகள் பணமோசடி தடுப்புச் சட்​டத்​தின் கீழ் முடக்​கப்​பட்​டுள்​ளது” என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT