வணிகம்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் - எலான் மஸ்க் மீண்டும் முதல் இடம் பிடித்தார்

செய்திப்பிரிவு

கலிபோர்னியா: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்துவந்த எலான் மஸ்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்குத் தள்ளினார்.

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 2-ம் இடம் வகித்து வந்தார். தற்போது டெஸ்லா நிறுவனத்தின் பங்குமதிப்பு 100 சதவீதம் அதிகரித் துள்ளது. இந்நிலையில், எலான் மஸ்க் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

லூயி வுட்டான் நிறுவனத்தின் சிஇஓ பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு 185.3 பில்லியன் டாலராக (ரூ.15.30 லட்சம் கோடி) உள்ள நிலையில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 187 பில்லியன் டாலராக (ரூ.15.45 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.6 லட்சம் கோடி)ட்விட்டர் நிறுவனத்தை வாங் கினார். 50 சதவீத ஊழியர்களை நிறுவனத்திலிருந்து நீக்கினார். அவரது நடவடிக்கைகள் சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளா னது. இதனால், அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது.

இதனால், உலக கோடீஸ் வரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஆனால், இவ் வாண்டு அவரது சொத்து மதிப்பு மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது. இவ்வாண்டில் இதுவரையில் அவரது சொத்துமதிப்பு 70 சதவீதம் அதிகரித் துள்ளது.

SCROLL FOR NEXT