மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 18 புள்ளிகள் (0.03 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 60,672 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18 புள்ளிகள் (0.01 சதவீதம் ) வீழ்ச்சியடைந்து 17,826 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 141.06 புள்ளிகள் உயர்வடைந்து 60,832.60 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 10.65 புள்ளிகள் உயர்வடைந்து 17,855.25 ஆக இருந்தது.
அமெரிக்க பெடரல் வங்கியின் நாணைய நிதிக்கொள்கை கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாக இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுணர்வுடன் செயல்பட்டனர். எண்ணெய், எரிவாயு மற்றும் நிதிபங்குகள் லாபம் தந்த போதிலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோ பங்குகள் தந்த வீழ்ச்சியால் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தது. இன்றைய நாளில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 60,583 வரை வீழ்ச்சியடைந்தது.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 18.82 புள்ளிகள் வீழ்ச்சிடைந்து 60,672.72 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17.90 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,826.70 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், என் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மாருதி சுசூகி, ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஐடிசி, கோடாக் மகேந்திரா பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மகேந்திரா, இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், அட்ல்டரா டெக் சிமெண்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.