வணிகம்

ஏற்ற இறக்கங்களின்றி தொடங்கிய பங்குச்சந்தை | சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்வு

செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்வடைந்து 60,576 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25 புள்ளிகள் உயர்வடைந்து 17,790 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகம் தட்டையாகவே தொடங்கின. காலை 09:23 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 69.44 புள்ளிகள் உயர்வடைந்து 60,576.34 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25.50 புள்ளிகள் உயர்வடைந்து 17790.10 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் குழப்பமான சூழல், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்ட முடிவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருப்பு. அதானி குழும நிறுவனங்கள் தங்களின் காலாண்டு அறிக்கைகளை இன்று அறிவிக்க இருப்பது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தட்டையாக தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி பங்குகள் உயர்வில் இருந்தன. பாரதி ஏர்டெல், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் பங்குகள் சரிவில் இருந்தன.

SCROLL FOR NEXT