மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 422 புள்ளிகள் உயர்வடைந்து 60,354 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 112 புள்ளிகள் உயர்ந்து 17,722 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 361.29 புள்ளிகள் உயர்வடைந்து 60293.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 48.65 புள்ளிகள் உயர்வுடன் 17,659.05 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல்களுக்கு இடையில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கின. நிதி மற்றும் எரிசக்தி பங்குகளின் உயர்வு சந்தை ஏற்றத்திற்கு காரணமாக அமைந்திருந்தது. அதானி குழும பங்குகளின் வீழ்ச்சி இன்றும் தொடர்ந்தன.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டைட்டன் கம்பெனி, இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ்,டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், விப்ரோ, எல் அண்ட் டி, இன்போசிஸ், மாருதி சுசூகி, எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பங்குள் உயர்வில் இருந்தன. ஐடிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், நெஸ்ட்லே இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், கோடாக் மகேந்திரா பேங்க், ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், என்டிபிசி பங்குகள் சரிவில் இருந்தன.