மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 47 புள்ளிகள் உயர்ந்து 60,400 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 18,003 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடனேயே தொடங்கியது. காலை 09:51 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 59.87 புள்ளிகள் உயர்ந்து 60,413.14 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 31.10 புள்ளிகள் உயர்ந்து 18,023.25 ஆக இருந்தது.
உலக அளவில் நிலவும் பாதகமான சூழல், கச்சா எண்ணையின் விலையுர்வு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று நிலையில்லாமல் ஏற்ற இறக்கத்துடனேயே வர்த்தகத்தை தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, என்டிபிசி, சன்பார்மா, பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன. கோடாக் மகேந்திரா, ஹெச்சிஎஸ் டெக்னாலஜிஸ்,ஹெச்டிஎஃப்சி, மாருதி சுசூகி, டெக் மகேந்திரா, ஆக்சிஸ் பேங்க், இன்போசிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் சரிவில் இருந்தன.