வணிகம்

பசுந்தேயிலை விலை கிலோ ரூ.17.76

செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.17.76 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்ட அறிக்கை: நீலகிரி மாவட்டத்தில் சிறு விவசாயிகளிடம் இருந்து தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கான விலையை மாதந்தோறும் இந்திய தேயிலை வாரியம் நிர்ணயம் செய்து வருகிறது.

டிசம்பரில் சிறு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பசுந் தேயிலை கிலோவுக்கு குறைந்த பட்சம் ரூ.17.76 வழங்க வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்படுவதை வாரிய அலுவலர்கள், துணை இயக்குநர்கள் கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT