மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வார முதல் நாளான திங்கள்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.சென்செக்ஸ் 468 புள்ளிகள் (0.76 சதவீதம்) உயர்ந்து 61,806 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 151 புள்ளிகள் (0.08 சதவீதம்) உயர்ந்து 18,420 ஆக இருந்தது.
திங்கள்கிழமை வர்த்தகம் 8 புள்ளிகள் உயர்வுடன் ஏற்றம் இறக்கம் இன்றியே தொடங்கியது. வர்த்தக நேரத்தின்போது கடந்த வாரத்தின் வீழ்ச்சியில் இருந்து மீண்டு சென்செக்ஸ் உயரத் தொடங்கியது. காலை 09:46 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 130.95 புள்ளிகள் உயர்ந்து 61,468.76 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33.50 புள்ளிகள் உயர்ந்து 18,302.50 ஆக இருந்தது.
உலகளாவிய பணவீக்கம் காரணமாக வட்டி விகிதம் அதிகரிப்பால் மோசமான சந்தை போக்கள் நிலவிய போதிலும், இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் ஆட்டோ மொபைல், எஃப்எம்சிஜி பங்குகளில் கவனம் செலுத்தினர். இதனால், கடந்த வார சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 468.38 புள்ளிகள் உயர்வடைந்து 61,806.19 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி151.45 புள்ளிகள் உயர்வடைந்து 18,420.45 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை எம் அண்ட் எம், பவர் கிர்டு கார்பரேஷன், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல்ஸ், டெக் மகேந்திரா, எல் அண்ட் டி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. விப்ரோ, இந்து இன்டஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.