ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் மொபைல் ஃபோன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு இருமடங்குக்கும் அதிகமாகி இருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
7 மாதங்களுக்குள் மொபைல் ஃபோன் ஏற்றுமதி 5 பில்லியன் டாலர் அளவைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்தியா ஏற்றுமதி செய்த 2.2 பில்லியன் டாலரை அளவை விட இருமடங்குக்கும் அதிகம்.
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, “உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.