வணிகம்

டிசிபி வங்கி லாபம் 31% உயர்வு

செய்திப்பிரிவு

டிசிபி வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 31 சதவீதம் உயர்ந்து 48.9 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.36.9 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் ரூ.464 கோடியில் இருந்து ரூ.567 கோடியாக உயர்ந்திருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடன் 1.72 சதவீதத்தில் இருந்து 1.75 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் நிகர வாராக்கடன் 0.87 சதவீதத்தில் இருந்து 0.84 சதவீதமாக சரிந்திருக்கிறது. வாராக்கடனுக்காக 26.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 21.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிகர வட்டி வரம்பு 3.79 சதவீதத்தில் இருந்து 3.96 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நிகர வட்டி வருமானம் 22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. டெபாசிட்டுகள் 30 சதவீதம் உயர்ந்து 17,685 கோடியாக இருக்கிறது. காசா விகிதம் 22-ஆக உள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1.21 சதவீதம் சரிந்து 122.10 ரூபாயாக இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

SCROLL FOR NEXT